ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கினார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக திலீப்பை நீக்கியது செல்லாது என அறிவித்து மீண்டும் அவரை சங்கத்திலேயே தொடர வைத்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகையின் ஆதரவாளர்களின் கோபத்துக்கும் ஆளானார்.
இந்தநிலையில் பிரச்சனை பெரிதாக வேண்டாம் என தற்போது திலீப்பே சங்கத்தில் இருந்து விலகுவதாக ராஜினமா கடிதம் கொடுத்துள்ளார். இப்போது என்ன பிரச்சனை என்றால், திலீப்பின் ராஜினமா குறித்து பேசும்போது, திலீப்பை தனது வீட்டுக்கு வரவழைத்து தானே ராஜினமா செய்ய சொன்னதாகவும் அதை ஒப்புக்கொண்டு திலீப் ராஜினமா கடிதம் கொடுத்ததாகவும் மோகன்லால் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஆனால் அதற்கு மறுநாளே திலீப் அனுப்பிய அறிக்கையில் என்னை யாரும் ராஜினமா பண்ண சொல்லவில்லை.. நானே தான் முன்வந்து விலகினேன் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது நடிகர் சங்க செயலாளர்களில் ஒருவரான ஜெகதீஷ் இதுபற்றி கூறும்போது, மோகன்லால் சொல்வது தான் உண்மை என கூறியுள்ளார்.
யார் கூறுவது உண்மை என்கிற பிரச்சனையில் மோகன்லாலுக்கும், திலீப்புக்கும் தேவையில்லாத சங்கடம் உருவாகிவிட்டதாகவே மலையாள திரையுலகில் பேசிக்கொள்கின்றனர்.