ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்தவருடம் கேரளாவில் நடந்த மலையாள நடிகை கடத்தல் சம்பவத்தில் குற்றவாளி ஆக்கப்பட்டது நடிகர் திலீப் தான் என்றாலும், இப்போது பெண்ணியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நடிகைகள் மோகன்லாலின் தலையையே அதிகம் உருட்டுகிறார்கள். ஆம்.. நடிகர்சங்க தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் என்பதற்காகத்தான்.
பெண்கள் நல அமைப்பின் பலவித போராட்டங்களுக்கு பிறகு, தற்போது திலீப்பை சங்கத்திலிருந்து ராஜினமா செய்ய வைத்த மோகன்லால் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, “எல்லா விஷயங்களிலும் என் பெயரை முன்னிறுத்தி இந்த விஷயம் பேசப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் கூட என் பெயரை முன்னிறுத்திதான் இந்த செய்தியை ஒளிபரப்புகிறார்கள்.
இதை நான் துளியும் விரும்பவில்லை. நடிகர் சங்க தலைவராக நான் இப்போது திருப்தியாக இல்லை. நான் எதற்கு அப்படி என் பெயரையும் கெடுத்துக்கொண்டு சங்க தலைவராக இருக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், தலைவர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை” என தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.