ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முண்டாசுபட்டி படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குனர் ராம்குமாரும் இணைந்தனர். அந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கு பிறகு இருவரும் இணைந்த படம் ராட்சசன். அதுவும் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்படம் கலகல காமெடி படம் என்றால் இரண்டாவது படம் அதிர வைக்கும் க்ரைம் த்ரில்லர்.
"இந்தப் படம் வெற்றியடையா விட்டால் அதை ஈடுகட்ட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் அடுத்த படத்தில் நடித்துக் கொடுப்பேன்" என்று விஷ்ணு விஷால் கூறியிருந்தார். தற்போது படம் வெற்றி பெற்றுவிட்டாலும் நானும் ராம்குமாரும் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஷ்ணு தெரிவித்திருந்தார். முண்டாசுபட்டி 2ம் பாகம், ராட்சசன் இந்தி ரீமேக், அல்லது புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது.
ஆனால் இப்போது ராம்குமார் அடுத்த படத்தில் தனுசுடன் இணைந்து பணியாற்றுகிறார். தனுசுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி விட்டார். இது காமெடி பேண்டசி படம். பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. தனுஷே தயாரிக்க இருக்கிறார். தற்போது ராம்குமார் திரைக்கதை அமைக்கும் பணி, படப்பிடிப்புக்கு லொக்கேஷன் பார்க்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.
வட சென்னைக்கு பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அடுத்து ஒரு படம் தயாராக இருக்கிறது. இது குறுகியகால தயாரிப்பு. அது முடிந்ததும் ராம்குமார் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதன் பிறகே வடசென்னை 2ம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.