ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்குப்பின் அவரது மகள் ஸ்ரீமயிக்கு, அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்..
இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார். அதன்பின் ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அந்தப்படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்தநிலையில் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி, தான் 'மோலிக்குட்டியின் சுயம்வரம்' என்கிற புதிய படம் ஒன்றில் அறிமுகமாகி நடித்து வருவதாகவும், அந்தப்படத்தை பஷிலி கபீர் என்பவர் இயக்குவதாகவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் தனது தாய்க்கு தந்த ஆதரவை தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீமயி.