மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். இதே போன்று கன்னட சினிமா, நடிகைகளை பாதுகாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமா நடிகைகள் உரிமை மற்றும் சமத்துவம் என்ற இந்த அமைப்பில் நடிகர் சேதன்குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிகரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் மீதான பாலியல் கொடுமை குறித்து இந்த அமைப்பு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இந்த அமைப்பின் சார்பில் 30 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்ட கடிதம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.