சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய இளம் முன்னணி நாயகனான விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் 'நோட்டா' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, படக்குழுவினருடன் பார்த்து ரசித்தார்.
தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் பேச வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசியதை பலரும் செல்போன்களில் படம் பிடித்து, உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். அவர்களின் அன்பில் நனைந்த விஜய், தமிழிலேயே பேசி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“எப்படி இருக்கீங்க. என்னோட வாழ்க்கையில முதல் முறையா இந்த நேரத்துல ஒரு படம் பார்க்கிறேன். உங்க எல்லாருக்கும் இந்தப் படத்தை நான் டெடிகேட் பண்றேன். உங்க எல்லாருக்கும் பெரிய நன்றி. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாரும் இங்கதான் படம் பார்த்துட்டிருக்கிறார்கள்,” என்று தமிழில் பேசினார்.