ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய இளம் முன்னணி நாயகனான விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் 'நோட்டா' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, படக்குழுவினருடன் பார்த்து ரசித்தார்.
தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் பேச வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசியதை பலரும் செல்போன்களில் படம் பிடித்து, உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். அவர்களின் அன்பில் நனைந்த விஜய், தமிழிலேயே பேசி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“எப்படி இருக்கீங்க. என்னோட வாழ்க்கையில முதல் முறையா இந்த நேரத்துல ஒரு படம் பார்க்கிறேன். உங்க எல்லாருக்கும் இந்தப் படத்தை நான் டெடிகேட் பண்றேன். உங்க எல்லாருக்கும் பெரிய நன்றி. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாரும் இங்கதான் படம் பார்த்துட்டிருக்கிறார்கள்,” என்று தமிழில் பேசினார்.