ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பேராயர் பிராங்கோ மூலக்ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராயர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரபல மலையாள குணசித்ர நடிகர் ஜோய் மேத்யூ தலைமையில் நேற்று மிட்டாயி இரவு பகுதியில் கண்டன பேரணி நடத்தினர்.
இந்த பகுதியில் ஊர்வலம், பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி ஜோய் மேத்யூ பேரணி நடத்தியதால் அவர் உள்ளட 24 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
"போலீசார் பேராயருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் தடை பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இப்போது வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்கிறார் ஜோய் மேத்யூ.