14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சமீபத்தில் மலையாளத்தில் பிஜூமேனன் நடித்த படையோட்டம் படம் வெளியானது. இதில் கதாநாயகியாக அல்லாமல் ஒரு முக்கிய மணப்பெண் கேரக்டரில் எய்மா செபாஸ்டியன் நடித்திருந்தார். இவர், கடந்த வருடம் வெளியான முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தார். இந்தப்படத்தை தயாரித்தவர் சோபியா பால். படத்தயாரிப்பு பணிகளை அவரது மகன் கெவின் பால் கவனித்துக்கொண்டார்.
படப்பிடிப்பு சமயத்தில் கெவின் பாலுக்கும் எய்மாவுக்கும் இடையே காதல் உருவாகி, வளர்ந்து, பின்னர் பெற்றவர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இந்தநிலையில் படையோட்டம் படத்தையும் சோபியா பால் தான் தயாரித்துள்ளார்.
இதில் ரொம்பவே டீசண்டாக வந்து போகும் மணப்பெண் கேரக்டருக்கு இயக்குனர் ஆள் தேடிக்கொண்டு இருக்க, தனது மருமகளையே அழைத்து இந்த கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டாராம் சோபியா பால். மாமியாரின் அன்புக் கட்டளையை ஏற்று இதில் நடித்தாராம் எய்மா செபாஸ்டியன்