ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய காமமோகிதம் என்கிற நாவலை படமாக்க மறைந்த இயக்குனர் பரதன் உள்ளிட்டட சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருமே இந்த நாவலில் இடம்பெறும் ஜஜாலி மற்றும் சாகர தத்தன் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லாலை மட்டுமே கற்பனை செய்து வைத்திருந்தனர்.
அதேசமயம் கே.ஜி .ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் இருவரையும் வைத்து இதை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கினார்.. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. மறைந்த இயக்குனர் பத்ரன், இந்த இரண்டு கேரக்டர்களிலும் மோகன்லாலை நடிக்க வைத்து இந்தப்படத்தை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் முன்னோக்கி நகரவில்லை. இந்தநிலையில் மம்முட்டியும் இதன் நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணனும் இணைந்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி, இந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப்படம் தற்போது மம்முட்டியின் கைகளுக்கு மாறியுள்ளது உறுதியாகியுள்ளது.