பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவனுக்கு யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருக்கிறது. மணிரத்னம், ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பிரபல டைரக்டர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். உருமி உள்ளிட்ட பல்வேறு படங்களையும் இயக்கியுள்ளார். நான்கு முறை தேசிய விருதும், பல்வேறு விருதுகளும் பெற்றுள்ள சந்தோஷ் சிவனுக்கு ஒரு மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருக்கிறது. அதாவது, ஏ.எஸ்.சி எனப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராகி இருக்கிறார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இந்த சங்கத்தில் உறுப்பினரான முதல் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஏ.எஸ்.சி எனப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆவது என்பது எளிதான காரியம் அல்ல. ஹாலிவுட்டின் பெரிய ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே இங்கு உறுப்பினராக சேர முடியும். அப்படி இருக்கையில் சந்தோஷ் சிவனுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியுள்ளதாவது, ஏ.எஸ்.சி.யில் உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவு நனவாகி இருக்கிறது. இது எனக்கு கிடைத்தி மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். நான் இந்தளவுக்கு உயர எனக்கு உறுதுணையாக இருந்த எனது டைரக்டர்கள் மணிரத்னம், ப்ரியதர்ஷன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.