மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கடந்த 2004-ஆம் வருடம் திலீப்,காவ்யா மாதவன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தான் ரன்வே. இந்த படத்தை ஆக்சன் இயக்குனரான ஜோஷி இயக்கியிருந்தார். திலீப் வாலையார் பரமசிவம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படமும் இந்த கதாபாத்திரமும் தான் திலீப்பை முன்னணி ஹீரோவாக மாற்றியதுடன் அவர் கமர்ஷியல் கதாபாத்திரங்களுக்கும் பொருந்துவர் என நிரூபித்தது
தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகமாக வாலையார் பரமசிவம் என்கிற பெயரிலேயே உருவாக இருக்கிறது முதல் பாகத்தை இயக்கிய ஜோஷியே இந்த படத்தையும் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே முடிந்திருந்தாலும், அதற்கடுத்து திலீப்பின் வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் இந்த படத்தை மேற்கொண்டு நடத்த முடியாமல் நிறுத்தியிருந்தது
இப்போது திலீப் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்தையும் முடித்து கொண்டு வருவதால் இந்த படத்தை எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம் என முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என தெரிகிறது