ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற திருநங்கை தான் அஞ்சலி அமீர். கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தநிலையில் மலையாளத்தில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் பங்கெடுத்துக் கொண்டார். கடந்தவாரம் உடல்நிலை சரியில்லாததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் கடந்த வாரம் எலிமினேசனுக்கு தேர்வான ஐந்து பேரில் அதிதி மேனன் என்பவர் வெளியேற்றப்படுவதாக மோகன்லால் அறிவித்தார். அவர் வெளியேறும் சமயத்தில் சரியாக அஞ்சலி அமீரிடம் இருந்து மோகன்லாலுக்கு போன் அழைப்பு வந்தது.
எலிமினேஷன் சமயத்தில் போன் பண்ணியதை அறிந்த அஞ்சலி அமீர், இந்தவாரம் யாரையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என மோகன்லாலிடம் வேண்டுகோள் வைத்தார். மோகன்லாலும் அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள, சோகத்தில் இருந்த அதிதி மேனன் உள்ளிட்ட போட்டியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.