ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் அறிவுஜீவி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தனித்துவமான நடிகையாக அறியப்படுகிறார். பார்வதி ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நிச்சயம் நல்ல படமாக இருக்கும் என்கிற இமேஜ் இருக்கிறது. தமிழிலும் அப்படித்தான் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகியவை பார்வதி நடித்த படங்கள்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றிய கருத்துக்களை துணிச்சலுடன் கூறக்கூடியவர். பிரபல நடிகை கடத்தப்பட்டபோது அதற்கு எதிராக அதிகம் பேசியவரும் பார்வதி தான். மம்முட்டியைகூட கடுமையாக விமர்சித்தார். இதனால் லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும், எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். அன்பாக இருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.