ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் காசி படம் மூலம் விக்ரமுக்குள்ளிருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர் மலையாள இயக்குனர் வினயன். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர், கடந்த பத்து வருடங்களாக மலையாள நடிகர் சங்கத்துடன் எப்போதுமே மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் ஒரு அதிகாரப்ப்பூர்வமற்ற தடையும் அவர்மீது விதிக்கப்பட்டது
இந்தநிலையில் மறைந்த நடிகர் திலகனின் மகனும் வில்லன் நடிகருமான ஷம்மி திலகன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் முகேஷ், வினயன் டைரக்சனில் தான் நடிக்க கூடாதென்று பிரஷர் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து இயக்குனர் வினயன் தனது முகநூல் பக்கத்தில் முகேஷின் பிரஷர் காரணமாக ஷாமி திலகன், தன்னிடம் வாங்கிய முன்தொகையை திருப்பி கொடுத்ததாகவும், முகேஷ் மனித நேயமற்றவர் என்றும் அவர் ஒரு துரோகி என்றும் கொந்தளித்துள்ளார்.