ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்துகொண்டால் விழாவை புறக்கணிப்போம் என விருது பெற்ற சிலர் போர்க்கொடி தூக்கி கடந்த இரண்டு வாரங்கள் முழுதும் மலையாள திரையுலகை பரபரப்பிலேயே வைத்திருந்தனர்.
இந்தநிலையில் விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், "நான் இங்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவில்லை. கடந்த 40 வருடங்களாக உங்களுடனே தான் பயணித்திருக்கிறேன்.. அதனால் மற்றவர்கள் விருது பெறுவதில் எனக்கு எந்தவித பொறாமையும் இல்லை.. உங்களில் ஒருத்தனாக, நீங்கள் விருது வாங்குவது கண்டு பெருமைப்படும் சக கலைஞனாகவே இங்கு வந்துள்ளேன்" என தன் மீது எழுந்த எதிர்ப்புகளுக்கு நெகிழ்ச்சியான முறையில் பதில் கூறினார்.