ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இன்றைக்கு சோஷியல் மீடியாக்களில் வெளியாகும் ஒரு புகைப்படம் கூட சாமானிய நபர் ஒருவரை ஒரேநாளில் பிரபலமாக்கி விடுகிறது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் யூனிபார்ம் அணிந்துகொண்டு மீன்விற்பது போன்ற புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது..
திருச்சூரை சேர்ந்த ஹனன் என்கிற அந்த மாணவி, குடும்ப சூழல் காரணமாக அதிகாலையிலேயே மார்க்கெட் சென்று மீன்வாங்கி வந்து விற்றுவிட்டு, அதன்பின் நீண்ட தூரத்தில் உள்ள கல்லூரிக்கு சைக்கிளில் சென்று படித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சோஷியல் மீடியாவில் பரவிய இவரது புகைப்படம் ராம்லீலா பட இயக்குனர் அருண்கோபியின் கண்களில் பட, அவர் ஹனனை சந்தித்து தற்போது மோகன்லால் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
கலாபவன் மணி உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவர் நடத்தும் மேடை நிகழ்ச்சிகளில் ஹனனுக்கு வாய்ப்பு தருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.