ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சகாப்தம், மதுரைவீரன் படங்களில் நடித்தவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன். மதுரைவீரன் படத்திற்கு பிறகு நெதர்லாந்து சென்று நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தபடியாக தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தநேரத்தில், ஒரு பெண்ணுடன் தான் இணைந்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சண்முகப்பாண்டியன். அந்த பெண் அவருடன் நெதர்லாந்தில் படித்தவராம்.
சமீபகாலமாகவே நெதர்லாந்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சண்முக பாண்டியன், அந்தத் தருணங்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.
இணையதளங்களில் இவர் தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா? என்று கமெண்ட் கொடுத்து அந்த போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள். இந்த கமெண்டுகளுக்கு சண்முகப்பாண்டியன்தான் பதில் கொடுக்க வேண்டும்.