ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு ரசிகர்களுக்கு பாலாவை நன்றாக தெரியும். ஒல்லி உடம்பு சத்தமான பேச்சு, காமெடியான உடல் மொழி என கலக்குகிறவர்.
காரைக்கால் அருகில் உள்ள நெடுங்காடு என்ற கிராமம் தான் பாலா பிறந்த ஊர். இயல்பாகவே மிமிக்ரி திறமை உள்ள பாலா சின்ன சின்ன நிகழ்ச்சியில் பங்கேற்று மிமிக்ரி செய்து வந்தார். சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அமுதவாணன் இவரிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து விஜய் டி.விக்குள் அழைத்து வந்தார். தனது திறமையால் இப்போது சினிமாவில் காமெடி நடிகராகி விட்டார். அதுவும் விஜய் சேதுபதி படத்தில்.
பாலா கூறியதாவது: எங்கள் ஊரில் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ரசிகர் மன்றம் வைத்து அதன் தலைவராக இருந்தேன். குறுகிய காலத்துக்குள்ளேயே அவரது படத்தில் நடிக்க வந்து விட்டேன். அமுதவாணன் அண்ணாவும், ராஜு அக்காவும் தான் இதற்கு காரணம். முதல் படத்திலேயே வெளிநாட்டுக்கெல்லாம் போய்விட்டு வந்து விட்டேன். என்றார்.