கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மலையாள நடிகர்களில் தங்களது படத்தின் 2-ஆம் பாகங்களில் அதிகம் நடிப்பவர் யாரென்றால் அது நடிகர் ஜெயசூர்யா தான். அந்த வகையில் கடந்த 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது,
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'ஆடு; ஒரு பீகர ஜீவியானு படம் சுமாரான வெற்றி பெற்றாலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் செய்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் 2016ல் ஜெயசூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பிரேதம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளார்கள்.
முதல் பாகத்தில் டான் பாஸ்கோ என்கிற மனநல மருத்துவராக நடித்திருந்த ஜெயசூர்யா, ஆவியாக அலையும் கல்லூரி மாணவிக்கு தனது விசாரணை மூலம் ஜெயசூர்யா நீதி வாங்கித்தரும் விதமாக கதை அமைந்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் ஜெயசூர்யாவின் கேரக்டரை இன்னும் டெவலப் செய்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர்.. ஆம்.. ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான அதே ரஞ்சித் ஷங்கர் தான்...