ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர்களில் தங்களது படத்தின் 2-ஆம் பாகங்களில் அதிகம் நடிப்பவர் யாரென்றால் அது நடிகர் ஜெயசூர்யா தான். அந்த வகையில் கடந்த 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது,
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'ஆடு; ஒரு பீகர ஜீவியானு படம் சுமாரான வெற்றி பெற்றாலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் செய்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் 2016ல் ஜெயசூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பிரேதம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளார்கள்.
முதல் பாகத்தில் டான் பாஸ்கோ என்கிற மனநல மருத்துவராக நடித்திருந்த ஜெயசூர்யா, ஆவியாக அலையும் கல்லூரி மாணவிக்கு தனது விசாரணை மூலம் ஜெயசூர்யா நீதி வாங்கித்தரும் விதமாக கதை அமைந்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் ஜெயசூர்யாவின் கேரக்டரை இன்னும் டெவலப் செய்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர்.. ஆம்.. ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான அதே ரஞ்சித் ஷங்கர் தான்...