கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்கள் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின.. இதில் இரண்டாவதாக வெளியான கூடே படம் ஓரளவு வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்தப்படத்தை பெங்களூர் டேய்ஸ் புகழ் அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார். அதே சமயம் ரோஷினி தினகர் என்பவர் இயக்கிய மை ஸ்டோரி படமோ ஒரு வாரமே முடிந்த நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்த இரண்டு படங்களிலும் பார்வதி தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டையுமே பெண் இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர். இந்த ஒற்றுமை நிச்சயம் ஏதோ ஒரு படத்தை பாதிக்கவே செய்யும். அதனால் மை ஸ்டோரி படத்தை கொஞ்ச நாள் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரோஷினியிடம் கூறினேன். ஆனால் அவரோ, தான் ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தான் படத்தை ரிலீஸ் செய்வேன் என பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என் கையில் இல்லையே" என கூறியுள்ளார் பிருத்விராஜ்.
மலையாள சினிமாவை பொறுத்தவரை அங்குள்ள முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியில் தலையிட முடியாது. இப்போதும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வசம் தான் ரிலீஸ் தேதி முடிவெடுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..