ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் துல்கர். அறிமுக இயக்குனரான நவ்பல் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்காக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான நாதிர்ஷா.
தற்போது, தமிழில் தனுஷ் தயாரிப்பில் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்கிற படத்தை இயக்கி வரும் நாதிர்ஷா, ஏற்கனவே மலையாளத்தில் அமர் அக்பர் அந்தோணி, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்..
இயக்குனர் என்றாலும் அடிப்படையில் இசையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள நாதிர்ஷா, துல்கர் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது அந்தப்படத்தின் கதாசிரியர்கள் பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்காகத் தான். ஆம். நாதிர்ஷாவின் முந்தைய இரண்டு படங்களின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் இந்த இரட்டை கதாசிரியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.