ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடிகர் சங்கமான அம்மா-வில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் மோகன்லாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எங்களுக்கு பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இருவரின் விலகல் கடிதம் தான் கிடைத்துள்ளது என கூறியிருந்தார்.
இதை கவனித்த சினிமா பெண்கள் நல அமைப்பினர், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகளும் ஈ மெயிலில் தங்களது விலகல் கடிதத்தை அனுப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்ல தாங்கள் சங்கத்தில் இருந்து விலகியதை மீடியா மூலமாக அறிவித்தும் விட்டார்கள். இதுவரை மோகன்லால் மெயில் செக் பண்ணாமல் தான் பேட்டி கொடுத்தாரா என கிண்டலாக கேட்டுள்ளார்கள்.