ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாள திரையுலகில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடிகர் சங்கமான அம்மா-வில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் மோகன்லாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எங்களுக்கு பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இருவரின் விலகல் கடிதம் தான் கிடைத்துள்ளது என கூறியிருந்தார்.
இதை கவனித்த சினிமா பெண்கள் நல அமைப்பினர், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகளும் ஈ மெயிலில் தங்களது விலகல் கடிதத்தை அனுப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்ல தாங்கள் சங்கத்தில் இருந்து விலகியதை மீடியா மூலமாக அறிவித்தும் விட்டார்கள். இதுவரை மோகன்லால் மெயில் செக் பண்ணாமல் தான் பேட்டி கொடுத்தாரா என கிண்டலாக கேட்டுள்ளார்கள்.