ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்திற்கு "மாநாடு" என தலைப்பு வைத்திருக்கிறார்கள். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியதாவது... வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்காக இந்தப்படம் என்று சொல்வது உண்மையல்ல.
படத்தில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று நினைக்கும்போது அதை பேசியே ஆக வேண்டும், அதற்காக பயந்து போக கூடாது. பொதுவாக சினிமாவிற்கு நிறைய பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை தொடருகின்றன.
சர்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஏன் வருகிறது என அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதைப்பற்றி நான் இப்போது எது பேசினாலும் தவறாகிவிடும். ஆகவே, விவாத மேடையில் அன்புமணி இதுகுறித்து விவாதிக்க முன்வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு, எப்போது என்று அவரே சொல்லட்டும். ஒரு நடிகனாக பதில் அளிக்க தயாராக உள்ளேன்.