கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் கடத்தப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியும், பிரபல நடிகையுமான பார்வதி நானும் அதுபோன்ற சம்பவத்தில் சிக்கினேன் என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடத்தப்பட்ட நடிகை எனது நெருங்கிய தோழி. அவர் கடத்தப்பட்ட செய்தி அறிந்து நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அவளுக்கு அப்போது யாரும் உதவ முன்வரவில்லை. இது எனக்கு இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் அதுபோன்ற ஒரு சம்பவம் (கடத்தல்) எனக்கும் நடந்தது. மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்தார்கள். அவர்கள் யார் என்பதை இப்போது குறிப்பிட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர்கள் கிரிமினல்கள். எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
அந்த சம்பவத்திற்காக நான் அழுது கொண்டு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.
அதைவிட்டு வெளியே வந்து விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது இதைச் சொல்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் சர்வசாதாரணமாக நடக்கிறது. பெண்களை சினிமாவில் போக பொருளாகத்தான் பார்க்கிறார்கள். இவ்வாறு பார்வதி கூறியுள்ளார். இது மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.