ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகை மேகா மேத்யூ சாலை விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அவரை ஒரு பத்திரிகை புகைப்பட கலைஞர் மீட்டு கொச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேகா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விபத்து குறித்து மேகா கூறியதாவது:
அண்ணனின் திருமண நிச்சயதார்த்திற்கு சென்றபோது தான் விபத்து நடந்தது. என் கார் மீது மோதிய கார், நான் என்ன ஆனேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நிற்காமல் சென்று விட்டது. தலைகுப்புற கவிழ்ந்த காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தேன். கைகால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் ஒடியது. இன்று நமக்கு மரணம்தான் என்றே முடிவு செய்தேன்.
சுற்றிலும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். எனது வேதனை குரல் அவர்களுக்கு கேட்கவில்லை. என்னை காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் போட்டிபோட்டு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக போட்டோகிராபர் வந்து தான் என்னை காப்பாற்றினார். செல்போன் மோகம் மக்களின் மனிதாபிமானத்தை மறைத்து விட்டதாகவே நினைக்கிறேன். என்கிறார் மேகா மேத்யூ.