மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'ஞான் மேரிக்குட்டி'என்கிற மலையாள படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் வெவ்வெறு காட்சிகளில் 32 முறை விதவிதமான சேலைகள் கட்டி நடித்துள்ளார் ஜெயசூர்யா. ஜெயசூர்யாவுக்கு அவரது மனைவி சரிதா தான் சேலை கட்டி பழக்கிவிட்டாராம். ஒருகட்டத்தில் நான்கு நிமிடங்களில் சேலைகட்டி பழகிவிட்ட ஜெயசூர்யா, தனது மனைவியை விட வேகமாக சேலைகட்டி அவரை ஆச்சர்யப்படுத்தினாராம்.
சேலைகட்டி நடித்த அனுபவத்தில் ஜெயசூர்யா கூறும்போது, "ஆண்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தயவுசெய்து உங்கள் வீட்டுப்பெண்கள் சேலைகட்ட நேரம் எடுத்துக் கொண்டால் அதற்காக அவர்களை கோபித்துக் கொள்ளாதீர்கள்" என வேண்டுகோள் வைக்கிறார்.