ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குழந்தை நட்சதிரமாக சினிமாவில் வலம் வந்தவர் ஷாம்லி. ஆனால் அவரால் ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை. அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன், கதையை மாற்றுங்க, கேரக்டரை சரி பண்ணுங்க, இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுவதால் இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்கவே தயங்கினார்கள்.
ஓயே என்ற தெலுங்கு படத்தின் முதன் முதலாக அறிமுகமானார். அதற்கு பிறகும் வாய்ப்பு கிடைக்காததால் சிங்கப்பூருக்கு படிக்கப்போனார். பிறகு திரும்பி வந்து வல்லியும் தெட்டி புல்லியும் தெட்டி என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகும் சொந்த மொழியிலும் வாய்ப்புகள் இல்லை.
பிறகு ஒரு வழியாக தமிழில் வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார். அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. கடந்த 2 வருடங்களாக வீட்டில் இருந்தவர் இப்போது அம்மாம்கரிலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் நாக சவுரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுமித்ரா, சிவாஜி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சூர்யா இயக்கி உள்ளார். இந்தப் படமாவது வெற்றி பெற்று ஷாம்லிக்கு வாய்ப்புகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.