ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பிப்ரவரி மாதம் திடீர் மரணமடைந்து இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மரணம் குறித்து இன்னும் சிலர் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து தான் வாழ்க்கையை கற்றுக்கொண்டதாக நடிகர் நாகார்ஜூனா கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை. கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார். அது மறக்க முடியாத நினைவுகள். அவருடன் நடித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதுகூட அவர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
அவரது மரணம் எதிர்பாராதது. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு நான் என்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாழ்கிற ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்கிறார் நாகார்ஜூனா.