ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகர் மோகன்லால் நேற்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுபோன்ற பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு தங்களது பட டிரைலர், பாடல், போஸ்டர் என எதையாவது ரிலீஸ் செய்வது வழக்கம். அந்தவிதமாக மோகன்லாலின் 'நீராளி' பட டிரைலரும் நேற்று வெளியானது. அனால் ஆச்சர்யமாக தனது ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்டுள்ளார் மோகன்லால்.
இந்த பிறந்தநாளில் தான் 'விஸ்வசாந்தி' என்கிற பவுண்டேஷனை தொடங்கியுள்ளதாகவும் அடித்தட்டு மக்கள் சந்திக்க, சமாளிக்க சிரமப்பட்டு வரும் மருத்துவம் மற்றும் கல்வி இரண்டிற்கும் அவர்களுக்கு உதவுவதே இந்த பவுண்டேசன் நோக்கம் எனவும் கூறியுள்ளார் மோகன்லால்.
மேலும் இந்த பவுண்டேசனிற்காக ரசிகர்கள் தங்களால் இயன்ற நன்கொடை அளிக்குமாறும் அதுதான் தனது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அளிக்கும் மகத்தான் பரிசாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தனது தந்தை விஸ்வநாதன் மற்றும் தாய் சாந்தாம்மாள் ஆகியோரின் நினைவாக அவர்களது பெயரிலேயே துவங்கியுள்ளார் மோகன்லால்.