ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் மீது பாலியல் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பாலியல் குற்றங்கள் என்ற தலைப்பில் ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கு இயக்குனார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நடிகையை படுக்கைக்கு அழைக்கிறவர்கள்தான். அவர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தங்கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். எதிர்காலம் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். இந்த பயமே இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவர் தன் படுக்கையை பகிர்ந்து கொள்வாரா என்றுதான் பார்க்கிறார்கள்.
பாலியல் தொல்லை மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்கள். நடிகர்களுக்கு 10 கோடி சம்பளம் கொடத்தால், நடிகைக்கு ஒரு கோடி கொடுக்க தயங்குகிறார்கள். இந்த வேற்றுமை களையப்பட வேண்டும். நடிகைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றம் புரிகிறவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். என்றார் ஸ்ரீரெட்டி.