ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டபோது குளியில் அறையில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். இது விபத்து மரணம் என்று சான்றிதழ் அளித்து ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
ஆனாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் சிங், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அதில் சந்தேகம் உள்ளது. இந்திய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் சுனில்சிங் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மேல் முறையீட்டு மனுவில்...
"ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் 240 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவர் அரபு நாட்டில் இறந்தால் மட்டுமே இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனையும், ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்ததையும் இணைத்து பார்க்கும்போது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் தள்ளுபடியை உறுதி செய்தது.