ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி' படம் வெளியானது. ஜீத்து ஜோசப் பாக்கா ஆக்சன் படமாக இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன் அறிமுகமான வாரிசு நடிகர்களை போல அல்லாமல், பிரணவிற்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர். அந்தவகையில் இந்தப்படம் 1௦௦வது நாளை தாண்டியது.
அதுமட்டுமல்ல 5௦ கோடி ரூபாய் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகையே வாய்பிளக்க வைத்தது 'ஆதி'. இதையடுத்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'புலி முருகன்' தயாரிப்பாளரும் பிரணவின் இரண்டாவது படத்தை தயாரிப்பவருமான தோமிச்சன் முலக்குப்பாடம் கலந்துகொண்டு அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கினார்.