ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏமாலி, நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. தற்போது நாடோடிகள்-2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார் அதுல்யா ரவி. ஆனால் தங்கை வேடம் என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம்.
இதுபற்றி அதுல்யா ரவி கூறுகையில், முகவரி துரை இயக்கிய ஏமாலி படத்தில் நான் நாயகியாக நடித்தேன். அந்த படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்தார். அப்போது எனது நடிப்பைப் பார்த்து தான், நாடோடிகள்-2 படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தில் தங்கை வேடம் என்றதும் பயந்தேன். ஆனால் கதையை கேட்ட பிறகுதான் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் நாடோடிகள்-2 படம் எனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்கிற நம்பிக்கையில் நடித்து வருகிறேன் என்கிறார் அதுல்யாரவி.