ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்மாளம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து பட்டியல், அறிந்தும் அறியாமலும், சர்வம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், அஜித் நடிப்பில் 'பில்லா', 'ஆரம்பம்' படங்களை இயக்கினார். விஷ்ணுவர்தன் கடைசியாக இயக்கிய படம் 'யட்சன்'.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கிறார் என்று தகவல் அடிபட்டு வந்தது. அதை விஷ்ணுவர்தனும் உறுதிபடுத்தினார். அஜித்துக்காக கதையை ரெடி பண்ணிவிட்டு காத்திருந்தார். ஆனால் அஜித்தோ தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியடைந்த விஷ்ணுவர்தன் அஜித்துக்கு சொன்ன கதையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகரிடம் சொன்னார். இந்த படத்தை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' சார்பில் கரண் ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து தயாரிக்கின்றனர்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கரண் ஜோகர் டுவீட்டரில் தெரிவித்துள்ளார். கார்கில் போரின்போது உயிர் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாகவிருப்பதாகவும், அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.