ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் மார்க்கெட் ஓய்ந்து விடும் என்ற கருத்தை அடியோடு தகர்த்து எறிந்து, இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.
சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு பிறகும் சுதந்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் பயந்தேன், பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டது. நல்லவேளையாக நான் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமைய எனக்கு உற்சாகத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.
சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை உணருகிறேன். திருமணத்திற்கு பிறகும் கணவர் குடும்பத்தார் என்னை சுதந்திரமாக இருக்க அனுமதித்து உள்ளனர். அவர்களின் ஆதரவோடு சினிமாவில் என்னால் தொடர்ந்து சாதிக்க முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.