ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுதம் கார்த்திக் நடித்துள்ள மிஸ்டர் சந்திர மவுலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,
முதலில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
48 நாள் ஸ்டிரைக் என்பது சாதாரண விஷயமில்லை. இது என்னுடைய வெற்றியல்ல. இன்று இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும்படி செய்துள்ளோம். சினிமாவில் ஒன்று தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும், இல்லையென்றால் தியேட்டர்காரர்கள் சம்பாதிக்கணும், இடையே வெளியால் வந்து ஆட்டையை போடுவது நல்லதல்ல. இதை தடுக்க எல்லோரும் சேர்ந்து போராடினோம். ஜூன் வரை எந்தெந்த படங்கள் ரிலீஸாக வேண்டும் என பட்டியல் தயாரித்துள்ளோம்.
உங்களின் பங்களிப்பு மூலமாக இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழ் சினிமா, இந்தியா சினிமாவிற்கே சிறந்த முன்னுதரணமாக இருக்கும்.
இவ்வாறு விஷால் பேசினார்