ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்ரீ ரெட்டி ஆரம்பித்த 'கேஸ்டிங் கௌச்' விவகாரம் பல்வேறு திருப்பங்களைக் கண்டு தற்போது அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மா, பவன் கல்யாண் இருவருக்கும் கடும் மோதலையும் ஏற்படுத்தி விட்டது. பவன் கல்யாண் நேரடியாகவே டிவி சேனல்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
இந்த சூழ்நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நேற்று நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான ஸ்டுடியோவில் திடீரென சந்தித்துப் பேசினார்கள். தற்போது நடந்து வரும் விவகாரம் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. ஒரு சிலர் டிவி சேனல்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தெலுங்கு செய்தி சேனல்களுக்குத் திரையுலகத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை அடியோடு குறைக்க வேண்டும் என பலர் கருத்து கூறியுள்ளதாகச் சொல்கிறார்கள். திரைப்பட நடிகர்கள் பற்றி தரக் குறைவாக செய்திகளை வெளியிடும் சேனல்களை விமர்சித்து சிலர் கருத்து சொன்னதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் என்ன முடிவெடுத்தார்கள் என்பது பற்றி எதுவுமே சொல்லாமல் நடிகர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.
இந்த கூட்டத்தை சிரஞ்சீவி முன்னின்று நடத்தியிருக்கிறார். நடிகர்கள் ராஜசேகர், வெங்கடேஷ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண், நாக சைதன்யா, சுமந்த், நானி, நரேஷ், அல்லரி நரேஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் நாகபாபு, அல்லு அரவிந்த், பிவிஎஸ்என் பிரசாத் உள்ளிட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்கு தேசம் ஆதரவு நடிகர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.