ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தில் இதநாள் வரையில் அதிகமான சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தவர் ராம்கோபால் வர்மா. அவருக்கும் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே மோதல் உண்டு. சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுக்கும், ராம்கோபால் வர்மாவுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ ரெட்டிக்கு பவன் கல்யாண் பற்றி பேசினால் மீடியாக்கள் திரும்பிப் பார்க்கும் என்ற யோசனையை ராம்கோபால் வர்மா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதை தான் தான் சொன்னேன் என வீடியோ பதிவு ஒன்றையும் நேற்று வெளியிட்டிருக்கிறார்.
பவன் கல்யாணை அசிங்கமான கெட்ட வார்த்தையால் திட்டி, தன் செருப்பை எடுத்து தானே அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. இப்போது அதை ராம்கோபால் வர்மா தான் சொல்லிக் கொடுத்துள்ளார் என்று தெரிந்ததும், பவன்கல்யாண் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். ராம்கோபால் வர்மாவை டுவிட்டரில் கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டார்கள்.
சில தினங்களுக்கு முன்புதான் இது தங்கள் குடும்பத்திற்கு எதிரான அரசியல் சதி என பவன் கல்யாண் அண்ணன் நாகபாபு பத்திரிகையளார்களைச் சந்தித்து தெரிவித்திருந்தார். இப்போது ராம்கோபால் வர்மா அதன் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டதால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்க வாய்ப்புள்ளது.