வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் 'கம்மார சம்பவம்' என்கிற படம் கடந்த சனிக்கிழமையன்று ரிலீஸானது. மூன்று மணி நேர படம் என்றாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது இந்தப்படம். தற்போது இந்தப்படத்தின் புரமோஷனுக்காக துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் திலீப்..
கடந்த ஆண்டு நடிகை வழக்கில் சிக்கி சிறைசென்று, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள திலீப் வெளிநாட்டு செல்வதற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு வெளிநாடு சென்றுவர பத்து நாட்கள் அனுமதி அளித்துள்ளது.