ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் துல்கர் சல்மான் - பார்வதி நடிப்பில் வெளியான சார்லி ரசிகர்கள் பலரையும் கவர்ந்த படம். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதியவர் பிரபல கதாசிரியாரான ஆர்.உன்னி என்பவர். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிக்கவுள்ள 'ஒரு பயங்கர காமுகன்' என்கிற படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர், எழுதியுள்ள கதை தான் 'கோட்டயம் குர்பானா'. இந்தக்கதை நயன்தாராவுக்கு பிடித்துப்போய்விடவே, இதில் கதாநாயகியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அறிமுக இயக்குனர் மகேஷ் வெட்டியார் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம்.