ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெகபதி பாபு, சமீபகாலமாக வில்லன் மட்டுமின்றி மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ், மலையாளத்தில் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வரும் அவரை தெலுங்கு படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஜனாதிபதி பாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெகபதிபாபு. அந்த வேடத்தில் அவர் நடித்திருந்ததை பலரும் பாராட்டி வந்த நிலையில, தற்போது பாகுபலி டைரக்டர் ராஜ மவுலியும் ஜெகபதிபாபு ஒரு சிறந்த நடிகர் என்பதை அந்த கதாபாத்திரத்தில் நிரூபித்து விட்டார். அவரது கதாபாத்திர வெளிப்பாடு மிகச்சிறப்பாக உள்ளது என்று பாராட்டியுள்ளார்.
ராஜமவுலியின் பாராட்டில் மகிழ்ச்சியடைந்த ஜெகபதிபாபு, தனது டுவிட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.