ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று என்ட்ரி கொடுத்தவர் சுஜா வாருணி. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் கேரக்டர் நடிகையாகி விட்டார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.
இந்நிலையில், ஒரு விழாவில் தான் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி. அந்த போட்டோக்களை பார்த்த சிலர் ஆபாசமாக கமெண்ட் கொடுத்துள்ளனர். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகி அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சுஜா.
அதில், எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை, எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. நான் ஒரு நடிகை நான் என்ன செய்கிறேனோ அதை பெருமையாகவும், என் சாப்பாட்டை பெருமிதத்துடனும் உண்கிறேன். சினிமா அல்லது பொது மேடைகளில் எந்த மாதிரியான உடையணிய வேண்டும் என்பது எனது விருப்பம். நான் அணியும் ஆடை தான் உங்களுக்கு பிரச்சினையா? அப்படியென்றால் சின்ன பிள்ளைகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நாங்கள் பிரச்னை இல்லை. நீங்களும், உங்களது பார்வையும், காமவெறியும் தான் பிரச்சினை. இப்படி கண்டபடி கமெண்ட் கொடுக்கும் உங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். அனைவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். உங்களைப் போன்றோர் ஒருநாள் கண்டறியப்பட்டு தண்டனை பெறுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சுஜா.