சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த கோடை விடுமுறையில் முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ராம்சரண் நடிக்கும் 'ரங்கஸ்தலம்' இந்த வாரம் மார்ச் 30ம் தேதியும், மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படம் ஏப்ரல் 20ம் தேதியும், அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'நா பேரு சூர்யா' படம் மே 4ம் தேதியும் வெளியாக உள்ளது. இந்த கோடை விடுமுறைப் போட்டியில் முதல் படமாக முந்திக் கொண்டு வருகிறது ராம்சரணின் 'ரங்கஸ்தலம்'.
இப்படத்தின் ஹிந்தி உரிமை எதிர்பார்த்த்தை விட பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். சமீப காலமாக தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்கள் யு டியூபில் பெரிய சாதனை படைத்து வருகிறது. அதனால், இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களை ஹிந்தி டப்பிங் உரிமைக்காக போட்டி போட்டு வாங்குகிறார்களாம். இப்படத்தை தமிழ்நாட்டில் திரையுலக ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதையடுத்து மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் கோடை விடுமுறையில் பல படங்கள் வெளியீட்டிற்காக்க் காத்துக் கொண்டிருக்கின்றன. திரையுலக ஸ்டிரைக் முடிந்த பிறகு புதிய படங்களின் வெளியீடுகள் வரிசைகட்டி நிற்க வாய்ப்புள்ளது.