ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அமலாபால், அவரை தொடர்ந்து நடிகர் பஹத் பாசில், நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தங்களது சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு மோசடி செய்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் நடிகை அமலாபால், பஹத் பாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தான், இத்தாலியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பில், தான் புதிதாக இறக்குமதி செய்துள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் லம்பார்க்கினி காரை கேரளாவிலேயே பதிவு செய்து அசத்தியுள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
இதை கேரளாவில் பதிவு செய்வதற்காக சுமார் 43.16 லட்ச ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார் பிருத்விராஜ். கேரளாவின் காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.