ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலீப்புக்கு சொந்தமாக கேரளாவில் சாலக்குடியில் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் உள்ளது. ஆனால் இந்த தியேட்டர்களை கட்டுவதற்காக அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என திலீப் மீது பொதுநல வழக்கு கடந்த 2015ல் தொடுக்கப்பட்டது.
விசாரணையில் திலீப் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததும், போலியான ஆதாரங்கள் தயார் செய்ததையும் சாலக்குடி நகராட்சி உறுதி செய்தது. அதேசமயம் இதற்காக நியமிக்கப்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள், திலீப் எந்த விதமான நில அபகரிப்பிலும் ஈடுபடவில்லை என சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்த அறிக்கையை திருச்சூரில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கில் முறையாக எப்.ஐ.ஆர் பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நடிகை வழக்கில் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான திலீப்புக்கு, இந்த நில அபகரிப்பு வழக்கும் சேர்ந்து சிக்கலை உண்டாக்கும் என்றே தெரிகிறது.