ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. ரஜினி, கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு குறைந்துள்ளது. தற்போது, அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபு உடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது அவரது மேலாளர் முனுசாமி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் தான் இதுநாள் வரை அவருடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை பெற்று தரும்படியும் முறையிட்டுள்ளார்.