ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மலையாளத்தில் முதன்முதலாக நடித்துள்ள பூமரம் படம் ஒருவழியாக வரும் மார்ச்-16ல் வெளியாக இருப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதிலும் மாற்றம் வந்தால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
ஆனால் இவற்றில் எல்லாம் மனதை போட்டு குழப்பி கொள்ள கூடாது என காளிதாஸ் ஜெயராமுக்கு அவரது அம்மாவும், முன்னாள் நடிகையுமான பார்வதி அறிவுரை கூறியுள்ளாராம்.
“உன் தலைக்கு மேலே நிழலுக்காக ஒரு கூரை இருக்கிறது. உன்னுடைய உணவும் உனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை. ஆகவே நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள். பணத்தை பற்றியோ, நேரத்தை பற்றியோ ஒருபோதும் கவலைப்பட கூடாது” என மகனுக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை ஒரு தாயின் நிலையில் இருந்து கூறியுள்ளார் பார்வதி.