ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஒரு நடிகர் சிம்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிப் பாட, அனிருத் இசையமைத்ததாகச் சொல்லப்பட்ட 'பீப்' பாடல் ஒன்று யு டியூபில் 'லீக்' ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்த அந்தப் பாடலை எதிர்த்து மாதர் சங்கங்கள் ஆர்பாட்டங்களை நடத்தின. அனிருத்திற்கும், சிம்புவிற்கும் அவர்களது இமேஜைக் கெடுத்த பாடலாக அந்தப் பாடல் அமைந்தது.
இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தரிடம் பீப் பாடல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், “அந்த பீப் பாடல் விவகாரம் என்பது சிம்பு மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென நடத்தப்பட்ட ஒரு போர். பொதுவாக இசையமைப்பாளர்கள் டம்மி வார்த்தைகளைப் போட்டுத்தான் பாடல்களை உருவாக்குவார்கள்.
அப்படி உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று வெளியிட்டுவிட்டார். அந்தப் பாட்டை திருடி எடுத்துக் கொண்டு போய், திருட்டுத்தனமாகச் செய்து அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள். இந்த உலகத்தில் வைட்டமின் 'ப'வுக்காக எத்தனை பேர் இருப்பார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும். அப்படி ஒரு அட்மின் தான் அந்தப் பாடலை வெளியிட்டுவிட்டார்,” என்றார்.
டம்மி வார்த்தைகள் என்று சொன்னால் அதைக் கூட கெட்ட வார்த்தைகளாகத்தான் போட்டு சிம்பு பாடல் எழுதுவாரா என்பது பற்றி யாரும் அவரிடம் கேட்கவில்லை.