ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
13 ஆண்டுகளுக்கு முன் மம்முட்டி நடித்த ராஜமாணிக்கம் படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் பாஷை சொல்லித்தருவதற்காக ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளே நுழைந்தவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாராமுடு.
இத்தனை வருடங்களில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது, மம்முட்டி, மோகன்லால், திலீப்புடன் இணைந்து பல படங்களில் நடித்தது என நிறைய சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகிவிட்டார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதோ, இன்று மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு, கதாசிரியர் ஷியாம் புஷ்கரனோடு இணைந்து கதை எழுதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இந்தப்படத்தை 'மகேஷிண்டே பிரதிகாரம்' இயக்குனர் திலீஷ் போத்தன் இயக்குகிறார்.
ராம் இயக்கியுள்ள 'பேரன்பு' படத்தில் நாயகனாக நடித்துள்ள மம்முட்டி, இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்க தன்னுடன் சுராஜ் வெஞ்சாரமூடுவையும் தமிழுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.